Ad Code

வன்முறை அதிகரிப்பு யாழ் மாவட்ட காவல்துறை அதிகாரி எடுத்த நடவடிக்கை

 தமிழர் வாழும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யுத்தம் முடிவுக்கு வந்த நாள் முதல் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு காவல்துறை கண்காணிப்பு  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.



அத்துடன், காவல்துறையினரின் காவலரன்களையும் அதிகரிக்குமாறு சகல காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வடக்கு மாகாண யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களாக குழு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


வீடுகளுக்குள் அத்துமீறி நுழையும் வாள்வெட்டுக் கும்பல்கள் அங்குள்ளோரை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை பயன்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேயிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த காவல்துறை  அதிகாரி ,


யாழில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். யாழ் மாவட்த்தில் அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு காவல் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மற்றும் காவல்துறை  காவலரண்களை அதிகரிக்குமாறும் காவல்  நிலைய பொறுப்பதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என்று தெரிவித்தார்.


அத்துடன், சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகள், காவல்துறை  உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. பொதுமகன் ஒருவர் தனது முறைப்பாட்டை ஏற்க காவல்துறையின்  நிலையத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் எனது வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார்.


அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை தொடர்பில் காவல்துறையினர் மீதும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அத்துடன், முறைப்பாட்டாளர்கள் பலரது முறைப்பாடுகள் தேங்கிக் கிடைக்கின்றன. அவை தொடர்பில் எனது கண்காணிப்பின் கீழ் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


எனவே பொதுமக்கள் வன்முறைச் சம்பவங்கள், காவல்துறை அலுவலகர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது 0718592200 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை வழங்கினால் உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்குவேன்” என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார். உங்களுக்கு ஏதும் குழுக்களால் அல்லது தனி நபர்களோ அச்சுறுத்தல் விடுத்தால் உடனடியாக மேலே குறிப்பிடட தொலைபேசி இயக்கத்துக்கு தொடர்ப்பு கொள்ளுங்கள் 

Post a Comment

0 Comments

Close Menu