Ad Code

அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி

 இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் எதிர்வரும் மூன்று வருடங்களில் நிறைவேற்றப்படுமென கோத்தபாய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவி  வரும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றது இதனால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து  வருகிறார்கள்.


இதனால் இலங்கை அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் இந்த நிலையில்  நாவலப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைகையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.


கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கைக்கு கிடைத்த அனைத்து வருமானங்களும் இல்லாமல் போயுள்ளதாகவும், மில்லியன் தொகையான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டுள்ளதாகவும் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.



இதனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் இலங்கைக்கு கிடைத்த வருமானம் இல்லாமல் போயுள்ளதால், இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கப்பல் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.


இதனால் இலங்கையில்  பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், நாட்டு மக்களினால் வாழமுடியாது போயுள்ளது என்பதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டை தாம் ஐந்து வருடங்களுக்கு அரசை  பொறுப்பேற்றுள்ள போதிலும், இரண்டு வருடங்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனவே, கடந்த இரண்டு வருடங்களில் நிறைவேற்ற முடியாமல் போன அனைத்து வாக்குறுதிகளையும் எதிர்வரும் மூன்று வருடங்களில் கட்டாயம் இலங்கை அரசாங்கத்தால் நிறைவேற்றும்  உறுதியாக கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Close Menu